புத்தகத் தலைப்பு: இது யாருடைய வகுப்பறை? ஆசிரியர்: “ஆயிஷா”  இரா.நடராசன்     ** காலையில் பள்ளிக்கு குழந்தைகள் புன்னகையோடு வரும் சூழ்நிலை நிலவ...

Home » , , , , , » இது யாருடைய வகுப்பறை? - இரா.நடராசன்

இது யாருடைய வகுப்பறை? - இரா.நடராசன்

 புத்தகத் தலைப்பு: இது யாருடைய வகுப்பறை?

ஆசிரியர்: “ஆயிஷா”  இரா.நடராசன்

   

** காலையில் பள்ளிக்கு குழந்தைகள் புன்னகையோடு வரும் சூழ்நிலை நிலவினால் மட்டுமே கல்வியில் மாற்றம் ஏற்பட்டதாக 

பொருள்.


**அடிக்காமல்,திட்டாமல் குழந்தைகளை

அன்பால் அரவணைக்க இந்தப்புத்தகத்தை படித்தாலே போதும்


** விடைகள் கேட்டு பழக்கப்பட்ட குழந்தைகளை கேள்விகள் கேட்டு பழக்க இந்தப்புத்தகம் உதவும்.


**இந்த நூல் ஏழு பெரும் கட்டுரைகளைக் கொண்டது.


**முதலாவது கட்டுரை பழங்காலத்தில் இருந்து இப்போது வரை குருகுலம், திண்ணைப்பள்ளி, மதரஸா, தேவாலயக்கல்வி , மறுமலர்ச்சி யுகக் கல்வி என கல்வி  முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது.


** மாற்றம் என்பது மானிடதத்துவம்


**இரண்டாவது கட்டுரையின் தலைப்பு “இது யாருடைய வகுப்பறை?” . கல்வியில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியவை ரூசோவின் சிந்தனைகளும், ஜான் டூயியின் சிந்தனைகளும். ரூஸோ கல்வியை(Education) முன் வைக்க, ஜான் டூயி பள்ளியை(Schooling) முன் வைத்தார் என்கிறார் நடராசன். 



**“ கல்வி என்பது பரந்துபட்ட செயலாக்கம்; ஆனால் பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம்.” என இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். 


**மூன்றாவது இயலின் தலைப்பு ‘அறிவியல் தெரியும் ராமலிங்கத்தைத் தெரியுமா?’ என்பது. ஓர் அறிவியல் ஆசிரியர்க்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல் கற்கும் மாணவன் ராமலிங்கத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம்.


** “ குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியனின் அடிப்படைத் தகுதி” என்று பெருங்குரலெடுத்து நூலாசிரியர் கூறுகிறார்.


**நான்காவது கட்டுரையின் தலைப்பு “ வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது” என்பதாகும். துள்ளி ஓட வேண்டிய குழந்தைகள் கை கட்டி வாய் பொத்தி நெருப்பில் வெந்து மடிந்த கும்பகோணத்துத் துயரத்தை நினைவூட்டிப் பதைக்க வைக்கும் கட்டுரை இதுவாகும்.


**ஐந்தாவது கட்டுரையின் தலைப்பு “ உள்ளேன் டீச்சர்” என்பதாகும். எங்கு மாணவர்கள் பாதுகாப்பை உணருகிறார்களோ, எங்கு பயம் இல்லாமல் இருக்கிறதோ அப்படிப்பட்ட வகுப்பறைச் சூழலே வல்லமையுள்ள கற்றுணரும் சரியான இடம் ஆகும் என்கிறார் நூலாசிரியர்.


**ஆறாவது கட்டுரையின் தலைப்பு, “ அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை” என்பதாகும். பிறநாட்டு வகுப்பறைகளை அலசும் இக்கட்டுரை , பின்லாந்து, கியூபா நாடுகளின் கல்விமுறையைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறது. 


**கெடுபிடியும் இறுக்கமும் அற்ற வகுப்பறைகளை உருவாக்கி இன்று கல்வித்தரத்தில் முன்னுக்கு நிற்கிறது பின்லாந்து. கியூபாவில்வகுப்பறை என்பது பாடப்புத்தக ஆதிக்கத்தில் சிக்கிய வகுப்பறை அல்ல. முழு மனிதனை உருவாக்கும் பட்டறை அது. ஜப்பானின் சுமையற்ற யுட்டோரி கல்வித்திட்டமும் வெகுவாக நம்மை ஈர்க்கிறது


**கடைசி கட்டுரை “ வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெறிவோம்” என்பது ஆகும். ஆசிரியர் என்பவர் பாடம் நடத்திப் போகிறவர்  மட்டுமல்லர். அவர் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரை.


** வகுப்பறை மகிழ்வான மாணவருக்கான வகுப்பறையாக மாற முதன்மையான பணி

ஆசிரியர் தினந்தோறும் படிக்க வேண்டும்.கற்பிப்பதை விட மாணவர்களோடு கற்றுக்கொள்ள வேண்டும்


நன்றி

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

0 Comments:

Post a Comment

GENRES

Facebook

Blog Archive

Action Movies

Top of the week

Comedy Movies

Popular Posts

Advertisement

Ad Space 300x250
Buy Now

Animation Movies

Hindi Movies