புத்தகத் தலைப்பு: குழந்தைகளின் நூறு மொழிகள்
ஆசிரியர்: ச.மாடசாமி
** வாழும் கல்வியாளர் மாடசாமி ஐயா அவர்களின் 14 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
**மொழி,பண்பாடு,கல்வி,மனித உறவுகள் குறித்த ஐயாவின் அனுபவ தொகுப்பே இந்த நூல்.
** குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்களும் பணியினை நேசிக்கும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய நூல்
**மாணவர்களுக்கு கற்பித்தல் என்பதை விட
மாணவர்களோடு உரையாடல் என்பதே
சிறந்தது
**கல்வியின் அடித்தளம் அனுபவம்,மேலும்
கற்பதற்கான வழி சுதந்திரம்
**'பணமில்லாப் பரிவர்த்தனை' யை விட
' பயமில்லாப் பள்ளியே முக்கியம் .
**கல்வி மாணவனிடமிருந்து தொடங்குகிறது; ஆசிரியரிடம் இருந்து அல்ல.
மாணவர்களுக்குக் கற்பிப்பதைவிட அவர்கள் தம்மைத்தாமே கண்டுபிடித்துக் கொள்ள உதவுவதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி.
**ஆசிரியர்களைக் கண்கள் பல கவனிக்கின்றன .அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்! ஆனால் மாணவர்களின் கண்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க ஆசிரியரால் மட்டுமே முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியர்களின் பெருமை மாணவர்களின் கண்களும்...கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்
**விவாதம் என்பது அர்த்தமுள்ள உரையாடல்.
புரிதல் உண்டாவதற்கு நடத்தப்படும் உரையாடல்.முடிவு எடுக்கப்படும் போது தேவைப்படும் உரையாடல்,விவாதத்தில்
கருத்து மோதல் கட்டாயம் உண்டு.விவாதம் மாற்றம் காண்பதற்கான மோதல்
**கல்வி மாணவர்களிடமிருந்து
தொடங்கவேண்டும்....!
ஆசிரியரிடம் இருந்து
அல்ல...!
ஆசிரியர்கள் கற்பிப்பதை விடமாணவர்களே தங்களை கண்டுபிடித்து கொள்ள உதவவேண்டும்....!
நன்றி
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,


0 Comments:
Post a Comment